மங்களகரமான ஸ்ரீ சுபகிருது வருஷம் சித்திரை மாதம் 3 ஆம் ( 16.04.2022) தேதி சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி சித்ரகுப்த பூஜை மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்குதல்.
வருடத்தின் முதல் மாதம் சித்திரை. மாதத்தின் முக்கிய நாள் பௌர்ணமி. சூரியன் உச்சம் பெரும் சித்திரை மாத சூரிய ஒளியை முழுமையாக சந்திரன் பெற்று பௌர்ணமியை தருகிறது. ஒளி வரும்போது இருள் போகும் அப்படி இருள் என்ற பாவங்களை தோஷங்களை போக்கும் பௌர்ணமியாக இப்பெளர்ணமி இருக்கிறது.
நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை பார்த்துக் கொள்ளும் சித்ரகுப்தர் பிறந்தநாள் இன்று. இன்று நாம் சித்ரகுப்த பூஜை செய்ய பிறந்தநாள் பரிசாக நம்முடைய மலையளவு பாவக்கணக்கை கடுகளவாக குறைத்து கடுகளவு புண்ணியக்கணக்கை மலையளவாக கூட்டுவார்.
சித்ரகுப்த பூஜை செய்வது எப்படி? சித்ரகுப்த பூஜை பற்றிய கதை என்ன? சித்ரா பௌர்ணமி வழிபாடு போன்ற தாகவல்களி விளக்கமாக சொல்லியிருக்கும் காணொளிகளை கீழே இணைத்துள்ளோம். கண்டு பயன்பெறுங்கள்.

Leave a Reply